சுந்தரர் (இறைவர் ஆரூர் வாழ் அடியவர்களின் கனவில் தோன்றி அருள்புரிதல்):

சுந்தரரும் பரவையாரும் (அன்றைய பகற்பொழுதில்) சந்தித்த கணமுதலே பிரிவுத் துயரால் பெரிதும் வாடியிருக்க, அவ்விருவரையும் திருக்கயிலையிலினின்றும் நீங்கி இப்புவியில் தோன்றுமாறு முன்னர் அருளியிருந்த தியாகேசப் பரம்பொருள் அன்றிரவே ஆரூர் அடியவர்களின் கனவில் எழுந்தருளிச் சென்று, 'இன்றே ஆரூரனுக்கும் பரவைக்கும் மணம் புரிவிப்பீர்' என்று கட்டளையிட்டு அருள் புரிகின்றார்,
-
(திருமலைச் சருக்கம் - திருப்பாடல் 324) 
என்றின்னனவே பலவும் புகலும் இருளார் அளகச் சுருளோதியையும்
வன்தொண்டரையும் படிமேல் வரமுன்பு அருள்வான் அருளும் வகையார் நினைவார்
சென்(று) உம்பர்களும் பணியுசெல்வத் திருவாரூர்வாழ் பெருமான் அடிகள்
அன்(று) அங்கவர் மன்றலைநீர் செயுமென்று அடியார் அறியும் படியால் அருளி

No comments:

Post a Comment