ஞானக் குழந்தை - திரைப்படக் காட்சி (திரைக்கதையும் உண்மை வரலாறும்):

1979ஆம் ஆண்டு வெளிவந்த 'ஞானக் குழந்தை' திரைப்படத்தில், சிவபெருமானும் அம்பிகையும் திருஞானசம்பந்தர் முன்பு மாறுவேடத்தில் தோன்றி பொற் தாளத்தினை அளித்துப் பின் அம்பிகையைக் குறித்துப் பாடச் சொல்வதாக இடம்பெற்றிருப்பது திரைக்கதைச் சுவைக்காக உருவாக்கப் பெற்றிருக்கும் கற்பனைக் காட்சியே. அதனைத் தொடர்ந்து 'ஓசை கொடுத்த நாயகியே' எனும் திரைப்பாடலும் அற்புதமாய் அமைக்கப் பெற்றிருக்கும். 

எனினும், திருக்கோலக்கா தலத்திற்கு ஞான சம்பந்தர் வருகை புரிகையில், அம்மையப்பரின் திருவருளால், 'சம்பந்தரின் பிஞ்சுக் கரங்களில் பொற்தாளம் தானாகச் சென்று சேர்ந்தது' என்பதே தெய்வச் சேக்கிழார் வெளிப்படுத்தும் பெரிய புராணக் காட்சி. மூல நூல் விவரிக்கும் உண்மை நிகழ்வினை உள்ளத்தில் இருத்தி, திரைப்படக் காட்சியை 'கற்பனை' எனும் புரிதலோடு அனுபவித்து மகிழ்வதில் தவறில்லை.

No comments:

Post a Comment