திருஞானசம்பந்தர் (பாலை நெய்தலாகப் பாடிய நிகழ்வு):

திருஞானசம்பந்தர் சிவத்தலமொன்றில், அடியவர்களின் வேண்டுகோளினை ஏற்றுப் பாலை நிலப் பகுதியை நெய்தலாக மாறும் வண்ணம் திருப்பதிகமொன்றினைப் பாடினார் என்றொரு திருமுறைக் குறிப்பு உண்டு. 

பெரிய புராணக் காலத்திற்கு முன்னரே 11ஆம் திருமுறை ஆசிரியரான நம்பியாண்டார் நம்பிகள் தம்முடைய 'ஆளுடைய பிள்ளையார் திருத்தொகையில்' இதனை 'பாலையும் நெய்தலும் பாடவலான்' என்று பதிவு செய்கின்றார். மற்றொருபுறம் சைவ சித்தாந்த சாத்திரங்களுள் ஒன்றான திருக்களிற்றுப்படியாரில் திருக்கடவூர் உய்யவந்த தேவ நாயனார் 'பாலைநெய்தல் பாடியதும்' என்று இந்நிகழ்விற்குப் பிரமாணம் கூறுகின்றார்.

மேற்குறித்த இரு அருளாளர்களும் நிகழ்வு நடந்தேறிய தலத்தினைக் குறிக்காவிடினும் சைவ மரபில் 'திருநனிபள்ளி' எனும் தலமே அந்நிகழ்விற்குரியது என்பர். எனினும் பெரிய புராணத்தில் சேக்கிழார் பெருமான் இந்நிகழ்வினைப் பதிவு செய்யாது விடுத்தது வியப்புக்குரியதே.

No comments:

Post a Comment