'மடையில் வாளைபாய' எனும் முதல் திருப்பாடலைத் தம்முடைய கரங்களால் தாளமிட்டவாறே பாடுகின்றார், சிவஞானக் குழந்தையின் பிஞ்சுப் பொற்கரங்கள் நோக, சிவபெருமானும் அம்பிகையும் பொறுப்பரோ! சம்பந்த மூர்த்தியின் கரங்களில் திருஐந்தெழுத்து பொறிக்கப் பெற்ற பொன்னாலாகிய தாளமொன்று வந்து சேர்கின்றது. திருவருளை வியந்து போற்றியவாறே சிவப்பிரசாதமான அத்தாளத்தை முழக்கித் திருப்பதிகத்தின் மற்ற திருப்பாடல்களையும் நிறைவு செய்கின்றார்.
முக்கண் முதல்வர் அருளிய தாளத்தில் எழும் சிவநாதத்தினைக் கேட்டு விண்ணவரும், நாரதரும், தும்புருவும் வியந்து போற்றிப் பணிகின்றனர். சீகாழிக்கு மீண்டும் திருப்பாதங்கள் நோக நடந்து செல்ல முனையும் சம்பந்தச் செல்வரைத் தந்தையார் தம்முடைய தோள்மீது சுமந்துச் செல்கின்றார்.
மடையில் வாளை பாய மாதரார்
குடையும் பொய்கைக் கோலக்காஉளான்
சடையும் பிறையும் சாம்பல் பூச்சும்கீள்
உடையும் கொண்ட உருவம்என்கொலோ!!!
No comments:
Post a Comment