விருது கவி ராஜ சிங்கம்:

'கருவின் உருவாகி வந்து' என்று துவங்கும் பழனித் திருப்புகழில் அருணகிரிப் பெருமான் ஞானசம்பந்த மூர்த்தியை 'விருது கவி ராஜ சிங்கம்' என்று போற்றி மகிழ்கின்றார். 'விருது' எனும் பதம் இங்கு 'வெற்றி' என்று  பொருள் படும் (வெற்றிக் கவி ராஜ சிங்கம்). 

தனதனன தான தந்த தனதனன தான தந்த
     தனதனன தான தந்த ...... தனதான

கருவின் உருவாகி வந்து வயதளவிலே வளர்ந்து
     கலைகள் பலவே தெரிந்து ...... மதனாலே

கரியகுழல் மாதர் தங்கள் அடிசுவடு மார் புதைந்து
     கவலை பெரிதாகி நொந்து ...... மிகவாடி

அரகரசிவாய என்று தினமும் நினையாமல் நின்று
     அறுசமய நீதியொன்றும் அறியாமல்

அசனமிடுவார்கள் தங்கள் மனைகள்தலை வாசல் நின்று
     அநுதினமும் நாணமின்றி ...... அழிவேனோ

உரகபட மேல் வளர்ந்த பெரியபெருமாள் அரங்கர்
     உலகளவு மால் மகிழ்ந்த ...... மருகோனே

உபயகுல தீப துங்க விருதுகவி ராஜ சிங்க
     உறைபுகலியூரில் அன்று ...... வருவோனே

பரவைமனை மீதிலன்று ஒருபொழுது தூது சென்ற
     பரமனருளால் வளர்ந்த ...... குமரேசா

பகையசுரர் சேனை கொன்று அமரர்சிறை மீளவென்று
     பழநிமலை மீதில் நின்ற ...... பெருமாளே.

No comments:

Post a Comment