நனிபள்ளியின் எல்லையை நெருங்கிய நிலையில், 'இரு மருங்கிலும் விண்ணுயர் மலர்ச்சோலைகளோடு அழகுற அமைந்துள்ள இத்தலத்தின் பெயர் என்ன?' என்று 3 வயது ஞானக் குழந்தையான சம்பந்தச் செல்வர் வினவ, தந்தையாரான சிவபாதரும் பெருமகிழ்வுடன் 'இதுவே நனிபள்ளி' என்று சுட்டுகின்றார். உடன் அந்நிலையிலேயே, தந்தையாரின் தோள் மீது அமர்ந்த வண்ணம் 'காரைகள் கூகை' என்று துவங்கும் திருப்பதிகத்தினால் நனிபள்ளி இறைவரைப் போற்றுகின்றார்,
-
காரைகள் கூகைமுல்லை களவாகை ஈகை படர்தொடரி கள்ளி கவினிச்
சூரைகள் பம்மிவிம்மும் சுடுகாடமர்ந்த சிவன்மேய சோலை நகர்தான்
தேரைகள் ஆரைசாய மிதிகொள்ள வாளை குதிகொள்ள வள்ளை துவள
நாரைகள்ஆரல் வாரி வயன்மேதி வைகும் நனிபள்ளி போலும் நமர்காள்.
'ஆணை நமதே' என்று ஞானசம்பந்தர் நிறைவு செய்தருளிய நான்கு திருப்பதிகங்களுள் நனிபள்ளியும் ஒன்றாகும் (மற்றவை கோளறு பதிகம், திருவேதிகுடி மற்றும் திருக்கழுமலத் திருப்பதிகங்கள்).
பின்னர் ஆலயத்தினை அடைந்து, உட்சென்று, நனிபள்ளி நாதரைக் காதலுடன் தொழுதுப் போற்றி செய்துப் பின் அத்தலத்திலேயே சிறிது காலம் தங்கி இருக்கின்றார்.
No comments:
Post a Comment