காழியர் தவமே, கவுணியர் தனமே, கலைஞானத்து
ஆழிய கடலே, அதனிடைஅமுதே, அடியார்முன்
வாழிய வந்திம் மண்மிசை வானோர் தனிநாதன்
ஏழிசை மொழியாள் தன்திருவருள் பெற்றனை என்பார்.
-மறைவளர் திருவே, வைதிக நிலையே, வளர்ஞானப்
பொறையணி முகிலே, புகலியர் புகலே, பொருபொன்னித்
துறைபெறு மணியே, சுருதியின்ஒளியே, வெளியேவந்து
இறையவன் உமையாளுடன் அருள்தர எய்தினை என்பார்.
-
புண்ணிய முதலே, புனைமணி அரைஞாணொடு போதும்
கண்ணிறை கதிரே, கலைவளர் மதியே, கவின்மேவும்
பண்ணியல் கதியே, பருவமதொரு மூவருடத்தே
எண்ணிய பொருளாய் நின்றவர்அருள் பெற்றனை என்பார்.
No comments:
Post a Comment