திருஞானசம்பந்தரைப் போற்றும் தேனினும் இனிய பெரியபுராணப் பாடல்கள்:

ஞானப்பாலுண்ட நிகழ்விற்குப் பின் இல்லம் திரும்பும் வழியில், 3ஆம் வயதிற்குள் அடியெடுத்து வைத்திருந்த சிவஞானக் குழந்தையினைச் சீர்காழி வாழ் திருத்தொண்டர்கள் எதிர்கொண்டு வணங்கிப் போற்றும் திருக்காட்சியினைச் சேக்கிழார் பெருமான் பின்வரும் திருப்பாடல்களால் பதிவு செய்கின்றார்,

காழியர் தவமே, கவுணியர் தனமே, கலைஞானத்து
ஆழிய கடலே, அதனிடைஅமுதே, அடியார்முன்
வாழிய வந்திம் மண்மிசை வானோர் தனிநாதன்
ஏழிசை மொழியாள் தன்திருவருள் பெற்றனை என்பார்.
-
மறைவளர் திருவே, வைதிக நிலையே, வளர்ஞானப்
பொறையணி முகிலே, புகலியர் புகலே, பொருபொன்னித்
துறைபெறு மணியே, சுருதியின்ஒளியே, வெளியேவந்து
இறையவன் உமையாளுடன் அருள்தர எய்தினை என்பார்.
-
புண்ணிய முதலே, புனைமணி அரைஞாணொடு போதும்
கண்ணிறை கதிரே, கலைவளர் மதியே, கவின்மேவும்
பண்ணியல் கதியே, பருவமதொரு மூவருடத்தே
எண்ணிய பொருளாய் நின்றவர்அருள் பெற்றனை என்பார்.

No comments:

Post a Comment