சுந்தரர் (கண்பார்வை மறைந்த காலடிப்பேட்டை):

சுந்தரர் திருவாரூர் தியாகேசப் பரம்பொருளைத் தரிசிக்கும் பெரும் காதலால், ஒற்றியூர் திருக்கோயிலில் சங்கிலியாருக்கு 'இவ்விடம் விட்டு அகலேன்' என்று அளித்திருந்த வாக்கினை மீறி, ஒற்றியூர் எல்லையைத் தாண்டும் மறுகணமே வன்தொண்டரின் கண்மலர்கள் இரண்டும் திருவருளால் மறைப்பிக்கப் பெறுகின்றன. இக்காரணத்தால் இவ்விடம் 'காலடிப்பேட்டை' என்று இன்று வரையிலும் வழங்கப் பெற்று வருகின்றது (உள்ளூர் வழக்கில் என்பதோடல்லாமல், கூகுள் வரைபடமும் 'Kaladipet' எனும் இப்பகுதியை மிகத் தெளிவாகச் சுட்டுகின்றது). 

No comments:

Post a Comment