சுந்தரர் திருவடி தீட்சை பெற்ற சித்தவட மடம் (தரிசனக் காட்சிகள்):

கடலூர் மாவட்டத்தில், திருவதிகை வீரட்டானேஸ்வர் திருக்கோயிலிலிருந்து 5 1/2 கி.மீ பயணத் தொலைவில், கோட்டலம்பாக்கம் எனும் சிற்றூரில் அமைந்துள்ளது சித்தவட மடம் எனும் சிதம்பரேஸ்வரர் திருக்கோயில். சிறிய ஆலய வளாகம், மூலக் கருவறைக்கருகில், சுவாமியை வணங்கும் திருக்கோலத்தில் சுந்தரரின் ஆச்சரியமான உற்சவத் திருமேனியைத் தரிசித்து மகிழலாம். 'திருநீர்ப் புனற்கெடில வீரட்டமும் திருவளப்பூர் தெற்கேறு சித்தவடம்' என்று அப்பர் தேவாரத்தில் குறிக்கப் பெற்றுத் தேவார வைப்புத் தலமாகவும் திகழும் சிறப்புப் பொருந்தியது, சுந்தரனார் இவ்விடத்திலிருந்து தான் திருவதிகை இறைவரைத் திருப்பதிகத்தால் போற்றிப் பரவியுள்ளார் (சிவ சிவ)!!!

No comments:

Post a Comment