எம்பிராட்டி திலகவதியார்:

திருத்தொண்டின் வேந்தரான நம் நாவுக்கரசு சுவாமிகளுக்குக் குருவாகத் திகழ்ந்து, திருநீறு பூசி, சிவமாம் பரம்பொருளின் திருவடிகளுக்கு ஆட்படுத்தி அருள் புரிந்த தபோதனியார். 'தூண்டு தவ விளக்கனையார்' என்று இந்த அம்மையாரைப் போற்றிப் பணிகின்றார் தெய்வச் சேக்கிழார் பெருமானார்,

(பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம் - திருப்பாடல் 34)
தம்பியார் உளராக வேண்டுமென வைத்த தயா
உம்பருலகு அணையவுறு நிலைவிலக்க உயிர்தாங்கி
அம்பொன் மணிநூல் தாங்காது அனைத்துயிர்க்கும் அருள்தாங்கி
இம்பர்மனைத் தவம்புரிந்து திலகவதியார் இருந்தார்

No comments:

Post a Comment