சைவ சித்தாந்தம் போற்றும் சுந்தரமூர்த்தி நாயனார்:

'மோகத்தினைத் துறந்தால் முத்தி அளிப்போம்' என்று சிவாகமங்கள் வாயிலாக எந்த இறைவர் அருளியுள்ளாரோ, அம்மூர்த்தியையே ஒரு பெண்ணின் நல்லாள் மீது கொண்டிருந்த மையலின் பொருட்டுத் திருவாரூர் திருவீதிகளில் தூதாகச் செல்லுமாறு அனுப்புவித்த 'வன்தொண்டரின் திருத்தொண்டினை என்னென்று போற்றுவது?' என்று திருக்களிற்றுப்படியாரின் ஆசிரியரான 'உய்யவந்த தேவனார்' வியந்து பணிகின்றார்.  

(திருக்களிற்றுப்படியார் - திருப்பாடல் 72):
மோகம் அறுத்திடின்நாம் முத்தி கொடுப்பதென
ஆகமங்கள் சொன்ன அவர் தம்மைத் தோகையர்பால்
தூதாகப் போகவிடும் வன்தொண்டன் தொண்டுதனை
ஏதாகச் சொல்வேன் யான்

No comments:

Post a Comment