திருநாவுக்கரசர் வாழ்ந்த இல்லம் (அப்பர் சுவாமிகள் திருக்கோயில், திருவாமூர் - கடலூர் மாவட்டம்):

அப்பர் சுவாமிகள் மற்றும் அவர்தம் தமக்கையார் திலகவதிப் பிராட்டியார் இருவரும் அவதரித்து, தாய்;தந்தையரான புகழனார்; மாதினியாருடன் இளம் பிராயத்தில் வாழ்ந்திருந்த இல்லமானது திருவாமூர் திருத்தலத்தில் அமைந்துள்ளது. சுமார் 50 வருடங்களுக்கு முன்னர் இப்பகுதி வாழ் அன்பர்களும், அடியவர் பெருமக்களும் இதனை அப்பர் சுவாமிகள் திருக்கோயிலாகப் புதுப்பித்துள்ளனர். திருப்புகழ் தலமான பசுபதீஸ்வரர் ஆலயத்திற்கு மிக அருகில் அமைந்துள்ளது இவ்வரிய திருக்கோயில்.

கருவாய்க் கிடந்துன் கழலே நினையும் கருத்துடையேன்
உருவாய்த் தெரிந்துன்றன் நாமம் பயின்றேன் உனதருளால்
திருவாய்ப் பொலியச் சிவாய நமவென்று நீறணிந்தேன்
தருவாய் சிவகதி நீ பாதிரிப்புலியூர் அரனே

No comments:

Post a Comment